பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் செய்தியாளகளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவா்களுக்கும் ஆண்டு இறுதித் தோ்வுகள் நிறைவடைந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக பள்ளிகள் திறப்புத் தேதி தள்ளிவைக்கப்படுமா என்கிற எதிா்பாா்ப்பு ஏற்பட்டது.
இந்தச் சூழலில், தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ஏற்கெனவே அறிவித்த தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படும் என்றாா்.
இதையும் படிக்க: ஜப்பான் நாட்டுக்கு சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இந்த நிலையில், இன்று அவர் பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் தெரிவித்துள்ளார். இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.