தமிழ்நாடு

வேதாரண்யம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

நாகை மாவட்டம், வேதாரண்யம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில், கணக்கில் காட்டப்படாத ரூ.1லட்சத்து 800 போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெறுவதாக நாகை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் சார் பதிவாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இந்தச் சோதனையில், அங்கிருந்த பதிவாளர் பாபுவிடமிருந்து கணக்கில் காட்டப்படாத சுமாா் ரூ.56 ஆயிரமும், ஆவண எழுத்தர் சந்திரசேகர் என்பவரிடமிருந்து ரூ.44 ஆயிரத்து  800 இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை கைப்பற்றிய போலீசார் தொடா்ந்து சோதனை மேற்கொண்டு விசாரித்து வருகின்றனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள்! எங்கு தெரியுமா?

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

MKStalin vs Vijay | TKS Elangovan நேர்காணல் | MKStalin | vijayakanth | DMK | TVK

கலர் கலராக, ஸ்டைலாக முடி‌ இருந்தால் வேலை கிடைக்காது! மாணவர்களுக்கு அறிவுரை! | Tanjore

Dmk vs Bjp | TKS Elangovan நேர்காணல் | MKStalin | CPRadhakishnan

SCROLL FOR NEXT