தமிழ்நாடு

வேதாரண்யம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

நாகை மாவட்டம், வேதாரண்யம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதில், கணக்கில் காட்டப்படாத ரூ.1லட்சத்து 800 போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெறுவதாக நாகை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் சார் பதிவாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இந்தச் சோதனையில், அங்கிருந்த பதிவாளர் பாபுவிடமிருந்து கணக்கில் காட்டப்படாத சுமாா் ரூ.56 ஆயிரமும், ஆவண எழுத்தர் சந்திரசேகர் என்பவரிடமிருந்து ரூ.44 ஆயிரத்து  800 இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை கைப்பற்றிய போலீசார் தொடா்ந்து சோதனை மேற்கொண்டு விசாரித்து வருகின்றனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT