விபத்துக்குள்ளான போலிரோ கார் 
தமிழ்நாடு

ராசிபுரம் அருகே வனவர் உள்ளிட்ட மூவர் விபத்தில் பலி

ராசிபுரம் அருகே உள்ள பேளுக்குறிச்சி மோளப்பாளையம் பேருந்து நிறுத்த நிழற்கூடத்தின் அருகே போலிரோ கார் மோதியது. இதில், வனவர் உள்ளிட்ட மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

DIN

ராசிபுரம் அருகே உள்ள பேளுக்குறிச்சி மோளப்பாளையம் பேருந்து நிறுத்த நிழற்கூடத்தின் அருகே போலிரோ கார் மோதியது. இதில், வனவர் உள்ளிட்ட மூவர் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கேரளாவை சேர்ந்த மரம் வியாபாரி மார்த்தாண்டம் ராஜன்(43), கொல்லிமலை ஆரியூர் பகுதியை சேர்ந்த மரம் வியாபாரி செல்வகுமார் (42) கொல்லிமலை வனவர் ரகுநாதன் (40), உட்பட 3 பேர் சனிக்கிழமை இரவு  கொல்லிமலையில் இருந்து  பொலிரோ காரில் ராசிபுரம் நோக்கி சென்றனர். 

அப்போது ஓட்டுநரின்  கட்டுப்பாட்டை இழந்து கார்பேளுக்குறிச்சி மோளப்பாளையம் பஸ் ஸ்டாப் நிழற்கூடத்தின் மீது ஜீப் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து பேளுக்குறிச்சி காவல்துறையினர் 3 பேரின் உடலை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மேலும் இந்த பகுதியில் விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் விசிக தொடரக் காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்

பெரியகுளம் பகுதியில் நாளை மின் தடை

அரசு ஐடிஐ-களில் பெண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

SCROLL FOR NEXT