தமிழ்நாடு

ராசிபுரம் அருகே வனவர் உள்ளிட்ட மூவர் விபத்தில் பலி

DIN

ராசிபுரம் அருகே உள்ள பேளுக்குறிச்சி மோளப்பாளையம் பேருந்து நிறுத்த நிழற்கூடத்தின் அருகே போலிரோ கார் மோதியது. இதில், வனவர் உள்ளிட்ட மூவர் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கேரளாவை சேர்ந்த மரம் வியாபாரி மார்த்தாண்டம் ராஜன்(43), கொல்லிமலை ஆரியூர் பகுதியை சேர்ந்த மரம் வியாபாரி செல்வகுமார் (42) கொல்லிமலை வனவர் ரகுநாதன் (40), உட்பட 3 பேர் சனிக்கிழமை இரவு  கொல்லிமலையில் இருந்து  பொலிரோ காரில் ராசிபுரம் நோக்கி சென்றனர். 

அப்போது ஓட்டுநரின்  கட்டுப்பாட்டை இழந்து கார்பேளுக்குறிச்சி மோளப்பாளையம் பஸ் ஸ்டாப் நிழற்கூடத்தின் மீது ஜீப் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து பேளுக்குறிச்சி காவல்துறையினர் 3 பேரின் உடலை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மேலும் இந்த பகுதியில் விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT