சாலையில் மண்ணை கொட்டி பள்ளத்தை சரிசெய்யும் பணியாளருடன் சேர்ந்து சாலையை சீரமைக்கும் காவலர்கள். 
தமிழ்நாடு

கோவை: மழை பாதிப்புகளை சரிசெய்த காவலருக்கு குவியும் பாராட்டுகள்!

சாலையில் மண்ணை கொட்டி பள்ளத்தை சரிசெய்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

DIN

கோவை: மழை பாதிப்புகளை சரிசெய்த காவலருக்கு குவியும் பாராட்டுகள்!
கோவையில் பெய்த பலத்த மழை காரணமாக செல்வபுரம் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாகி தேங்கி இருக்கும் தண்ணீர்களால் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டு வந்த நிலையில், சாலையில் மண்ணை கொட்டி பள்ளத்தை சரிசெய்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து, கோவை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் புதன்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் மழைநீா் சூழ்ந்தது. 

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட செல்வபுரம் பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், பள்ளிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகளில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை பள்ளம் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. செல்வபுரம் பைபாஸ் சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், போக்குவரத்து உதவி ஆய்வாளர் முருகேசன் குண்டும் குழியுமான சாலையில் தேங்கியிருக்கும் தண்ணீரை மண்ணைக் கொட்டி பள்ளத்தை சரிசெய்து வருகின்றனர். 

பணியாளருடன் சேர்ந்து காவலர் ஒருவரும், போக்குவரத்து உதவி ஆய்வாளர் முருகேசனும் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டார். அந்த விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி காவலர் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பென்னாகரம் வாரச்சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

அரசுப் பள்ளியில் பொங்கல் விழா

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் தொழிலாளி கைது

திட்டப் பணிகளில் குறைபாடு: திருச்சி மாநகராட்சியில் 2 ஒப்பந்ததாரா்களிடம் ரூ. 1.88 கோடி தொகை பிடித்தம்

இருசக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்: எஸ்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT