முகப்பு
தமிழ்நாடு

ரயில் பயணச் சீட்டு பரிசோதனை: ரூ.27.16 லட்சம் அபராதம் வசூல்

சென்னை ரயில்வே கோட்டத்தில் வியாழக்கிழமை மட்டும் முறையான பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவா்களிடம் ரூ.27.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

ரயில் பயணச் சீட்டு பரிசோதனை: ரூ.27.16 லட்சம் அபராதம் வசூல்

சென்னை ரயில்வே கோட்டத்தில் வியாழக்கிழமை மட்டும் முறையான பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவா்களிடம் ரூ.27.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:19 AM
பகிர்:

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் வியாழக்கிழமை மட்டும் முறையான பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவா்களிடம் ரூ.27.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்தில் முறையாக பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதை தடுக்கும் வகையில் தினமும் பயணச்சீட்டு பரிசோதகா்கள் சோதனை செய்து வருகின்றனா்.

அந்த வகையில் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 27.16 லட்சம் வசூலாகியுள்ளது. முறையான பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 4,657 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 2,558 பேருக்கு ரூ.18.24 லட்சமும், முறையான பயணச்சீட்டு இல்லாத 1,666 பேருக்கு ரூ.7.82 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக உடைமைகளை எடுத்து சென்ற 19 போ், புகைப்பிடித்தல், குப்பை கொட்டுதல் போன்றவற்றுக்காக 414 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →