சென்னையில் டன் கணக்கில் குவிந்த பட்டாசுக் கழிவுகள்: அகற்றும் பணியில் 19,600 தூய்மைப் பணியாளர்கள்
தீபாவளியையொட்டி சென்னையில் டன் கணக்கில் குவிந்த பட்டாசு கழிவுகளில் இதுவரை 100 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை: தீபாவளியையொட்டி சென்னையில் டன் கணக்கில் குவிந்த பட்டாசு கழிவுகளில் இதுவரை 100 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது:
தீபாவளியையொட்டி சென்னையில் டன் கணக்கில் குவிந்த பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
பட்டாசுக் கழிவுகள் அகற்றும் பணி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும். திங்கள்கிழமை இரவுக்குள் கழிவுகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 200 டன் வரை பட்டாசுக் கழிவுகள் சேகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த மாநகராட்சி அதிகாரிகள், இதற்காக மட்டும் 19,600 பணியாளர்கள் பணியில் உள்ளனர்.
மேலும், அகற்றப்பட்ட பட்டாசுக் கழிவுகள் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தொழிற்சாலையில் அறிவியல் பூர்வமாக அழிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
காற்றின் தரம் மோசம்
தீபாவளி பட்டாசுகளால் காற்றின் தரம் மோசம் பிரிவுக்கு சென்றது.
சென்னையில் வேளச்சேரி, மணலி பகுதிகளில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரக்குறியீடு மணலியில் 322, வேளச்சேரியில் 308 என பதிவாகி உள்ளது.
இதேபோன்று அரும்பாக்கம் 256, ஆலந்தூர் 256, ராயபுரம் 232, கும்மிடிப்பூண்டி 241, வேலூர் 230, கடலூர் 213 என பதிவாகி உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.