​மணிமுத்தாறு அருவியில் வெள்ளிக்கிழமை காலை காணப்படும் நீர்வரத்து 
தமிழ்நாடு

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து மீண்டும் வெள்ளிக்கிழமை காலை அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தனர்.

DIN

அம்பாசமுத்திரம்: 16 நாட்களுக்குப் பிறகு வியாழக்கிழமை மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்த நிலையில் வியாழக்கிழமை இரவு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து மீண்டும் வெள்ளிக்கிழமை காலை அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தென் மாவட்டங்களில் தீவிரம் அடைந்ததையடுத்து அக்டோபர் 31 முதல் களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. 

இதையடுத்து நவ.16 வியாழக்கிழமை நீர் வரத்து சீரானதால் மணிமுத்தாறு அருவியில் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். 

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு அம்பாசமுத்திரம், பாபநாசம், வீரவநல்லூர் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவி மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை காலை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். 

அருவியைப் பார்வையிட மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. நீர்வரத்து சீராகும் நிலையில் மீண்டும் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் துப்பாக்கியை எடுத்தால் பீரங்கியால் பதிலடி- பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை

தென்காசியில் நவ. 9இல் சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு

காரைக்குடி அருகே நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் 5,000 பனைவிதைகளை நடவு செய்ய திட்டம்

சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு சிறப்பு கடன்

SCROLL FOR NEXT