பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட சர்மிளா 
தமிழ்நாடு

தஞ்சாவூர் அருகே பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை: இளைஞர் கைது

தஞ்சாவூர் அருகே பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற இளைஞரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற இளைஞரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள கொசுவபட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் சர்மிளா (22). இவர் சென்னையில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 

தீபாவளிக்கு முன்பாக செங்கிப்பட்டி அருகே உள்ள தச்சன்குறிச்சி உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு சர்மிளா வந்தார். இதைத் தொடர்ந்து, தொடர்ந்து விடுப்பு எடுத்து தச்சங்குறிச்சியில் உள்ள தாய் மாமா பிரபு வீட்டில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில், தச்சங்குறிச்சி அருகேயுள்ள நாட்டாணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பிரபு உள்ளிட்டோர் சென்று விட்டனர். வீட்டில் இருந்த சர்மிளாவின் பாட்டி அவரை திட்டிக் கொண்டிருந்தாராம். இதனால் தன்னை அழைத்துச் செல்லுமாறு பிரபுவிடம் ஷர்மிளா கைபேசி மூலம் கூறினார்.

தன்னால் செல்ல முடியாத நிலையில் இருந்த பிரபு தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஆறுமுகம் மகன் கருப்புசாமியை (30) அனுப்பி வைத்தார். சர்மிளாவை கருப்பசாமி மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்கிழமை மாலை அழைத்து வந்து கொண்டிருந்தார். இதனிடையே, சர்மிளாவின் கைபேசிக்கு பிரபு தொடர்பு கொண்டபோது, இருவரும் நாட்டாணி அருகே வந்து கொண்டிருப்பதாக கூறினார். 

ஆனால் வெகு நேரமாகியும் நாட்டாணிக்கு வராததால் சந்தேகமடைந்த பிரபு கைப்பேசி மூலம் சர்மிளாவுக்கும், கருப்பசாமிக்கும் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் இருவரது கைபேசிகளும் அணைக்கப்பட்டிருந்ததால், அவர்களை பிரபு உள்ளிட்டோர் தேட தொடங்கினர். நள்ளிரவில் நாட்டாணி அருகே சென்னம்பட்டியில் ஷர்மிளா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து வல்லம் காவல் துறையினர் கருப்புசாமியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT