கோப்புப்படம் 
தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை: திருச்செந்தூரில் 33 மி.மீ. பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திருச்செந்தூரில் 33 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திருச்செந்தூரில் 33 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடித்த வழிமண்டல கீழடுக்கு சுழற்சியானது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதிக்கு நகருகிறது.

இக்காற்று சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமாக இருக்கும். குறிப்பாக தூத்துக்குடி திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் மிக அதிகமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதில், சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை தூத்துக்குடியில் 8.3 மி.மீ., குலசேகரப்பட்டணம் 15மி.மீ., சாத்தான்குளம் 20.8 மி.மீ., திருச்செந்தூர், காயல்பட்டிணம் 33 மி.மீ., என மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் கிடந்த 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்

தோ்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தல்

அரியலூரில் அடிப்படை வசதியின்றி ஆதாா் சேவை மையங்கள்! பொதுமக்கள் அவதி!

இளம்பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை

அரசு பொதுத் தோ்வு: 100% மாணவா்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT