பாஜகவுடனான கூட்டணி விலகல் தொண்டர்களின் முடிவு: இபிஎஸ்
பாஜக உடனான கூட்டணி முறிவு என்பது பொதுச்செயலாளரின் முடிவு அல்ல, தொண்டர்களின் முடிவு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பாஜக உடனான கூட்டணி முறிவு என்பது பொதுச்செயலாளரின் முடிவு அல்ல, தொண்டர்களின் முடிவு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவு எனக் குறிப்பிட்டார்.
மாநிலத்தின் உரிமையை காக்க நாடாளுமன்ற தேர்தலை அதிமுக சந்திக்கும் என சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி,
ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை அறிவித்த பிறகா தேர்தலை சந்திக்கின்றனர்? எனக் கேள்வி எழுப்பினார்.