தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் நீர் வரத்து குறைந்தது!

DIN


கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால் நீர் வரத்து குறந்தது.

கடந்த சில நாட்களாக கேரளாவில் மழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணையில் நீர் வரத்து அதிகமாக இருந்தது. தற்போது வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மழை பெய்து நின்றது. அதனால் அணைக்கு  நீர் வரத்தும் குறைந்தது. 

நீர் திறப்பு அதிகரிப்பு
அணைக்குள் நீர்வரத்து அதிகரித்து வந்ததால் வியாழக்கிழமை அணையிலிருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது, வெள்ளிக்கிழமை 1,167 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மின் உற்பத்தி
தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வியாழக்கிழமை 1,200 கன அடி வெளியேற்றப்பட்டதால் 108 மெகாவாட் மின்சாரமும் வெள்ளிக்கிழமை 1167 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 105 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டது.

அணை நிலவரம்
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 121.55 அடியாகவும் (மொத்த உயரம் 152அடி), நீர் இருப்பு 2,934 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 740 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1167 கன அடியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானுடன் இணையும் கேரி கிறிஸ்டன்!

பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

‘ஏஐ படங்களில் வருவதுபோல..’ புதிய சாட்ஜிபிடி அறிமுகத்தில் சாம் ஆல்ட்மேன்!

கங்கையை ஏமாற்றிய பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT