முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் 20 இடங்களில் வருமானவரித் துறை சோதனை

சென்னையில் தனியார் ஸ்டீல் நிறுவனத்துக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் புதன்கிழமை காலை முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:10 AM
பகிர்:


சென்னை: சென்னையில் தனியார் ஸ்டீல் நிறுவனத்துக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் புதன்கிழமை காலை முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சென்னை, ஆயிரம் விளக்கு, எழும்பூர், வில்லிவாக்கம், மாதவரம், மண்ணடி, தாம்பரம், குன்றத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை முதல்  சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சோதனையும், விசாரணையும் முழுமையாக முடிவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.