விஜயதசமி: ஆசிரியர்கள் பள்ளி வர உத்தரவு
விஜயதசமியையொட்டி ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
விஜயதசமியையொட்டி ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
அதேபோன்று இந்த ஆண்டு அரசு, அரசு உதவிபெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் அந்தப் பகுதியினைச் சார்ந்த பெற்றோர் விஜயதசமி தினத்தன்று அதாவது நாளை தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு வரக்கூடும்.
எனவே, ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வர வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.