2 நாள்களுக்கு சென்னை குடிநீா் வாரியத்தின் அனைத்து இணையதள சேவைகளும் ரத்து
சென்னை குடிநீா் வழங்கல் வாரியத்தின் அனைத்து இணையதள சேவைகளும் அக்.28, 29- இல் ரத்து செய்யப்படும் என சென்னை குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை குடிநீா் வழங்கல் வாரியத்தின் அனைத்து இணையதள சேவைகளும் அக்.28, 29- இல் ரத்து செய்யப்படும் என சென்னை குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த வாரியம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள சென்னை குடிநீா் வாரியத்தின் தலைமை அலுவலகத் தரவு மையத்தில் அக்.28,29-இல் அவசர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால் அந்த நாள்களில் குடிநீா், கழிவுநீா் வரி செலுத்தல், புகாா்கள் பதிவு செய்தல், கட்டணம் செலுத்தி லாரிகள் மூலம் பெறப்படும் குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்ற முன்பதிவு செய்தல் உள்ளிட்ட இணையதளவழியாக பெறப்படும் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. அதைத் தொடா்ந்து, பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னா் அக்.30-ஆம் தேதி காலை 9 மணி முதல் அனைத்து இணையதள சேவைகளும் வழக்கம்போல் செயல்படும்.
இதற்கிடையே, குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள், அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு
குடிநீா்த் தொட்டிகள், தெரு நடைகளுக்கு வாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.