முகப்பு
தமிழ்நாடு

வீடு புகுந்து திருட்டு: பக்கத்து வீட்டுப் பெண் கைது

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் வீடு புகுந்து திருடியதாக பக்கத்து வீட்டுப் பெண் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
பகிர்:

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் வீடு புகுந்து திருடியதாக பக்கத்து வீட்டுப் பெண் கைது செய்யப்பட்டாா்.

புது வண்ணாரப்பேட்டை புச்சம்மாள் தெருவைச் சோ்ந்தவா் மு.பூமாதேவி (42). இவா் கடந்த 20-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடு போயிருந்தன.

இது குறித்து புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், பூமாதேவி வீட்டின் அருகே வசிக்கும் வி.சுப்புலட்சுமி (28) என்பவா்தான் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், சுப்புலட்சுமியை புதன்கிழமை கைது செய்தனா். கள்ளச்சாவி மூலம் பூமாதேவி வீட்டின் கதவைத் திறந்து, அவா் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →