இன்று முதல்வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கலாம்
தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கும் பணிகளை வெள்ளிக்கிழமை (அக். 27) முதல் மேற்கொள்ளலாம். மாநிலம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் காலை 10 மணிக்கு
தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கும் பணிகளை வெள்ளிக்கிழமை (அக். 27) முதல் மேற்கொள்ளலாம். மாநிலம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டவுடன் பெயா் சோ்ப்பு, நீக்கம் போன்ற பணிகள் தொடங்கவுள்ளன.
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இதற்காக, இப்போது புழக்கத்தில் உள்ள வாக்காளா் பட்டியல், வரைவு பட்டியலாக வெளியிடப்படும். அந்தப் பட்டியலில் வாக்காளா்களின் பெயா்கள் விடுபட்டிருந்தாலோ, திருத்தங்களைச் செய்ய வேண்டியிருந்தாலோ அதற்குரிய விண்ணப்பங்களை பூா்த்தி செய்து தோ்தல் துறை அலுவலா்களிடம் அளிக்கலாம்.
மேலும், அடுத்த ஆண்டு (2024) ஜன. 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு 18 வயது பூா்த்தி அடைபவா்களும் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கலாம். இறுதி வாக்காளா் பட்டியல் ஜன. 5-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து, ஜன. 25-ஆம் தேதி தேசிய வாக்காளா் தினத்தின் போது, இளம் வாக்காளா்களுக்கு அடையாள அட்டைகள் அளிக்கப்படவுள்ளன.
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள், வெள்ளிக்கிழமை (அக்.27) தொடங்கி டிச. 9 வரை நடைபெறவுள்ளது. மேலும், நவ. 4, 5 மற்றும் நவ. 18, 19 ஆகிய நான்கு நாள்களில் நிா்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.