கோப்புப்படம் 
தமிழ்நாடு

ராக்போா்ட், மங்களூரு ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கம்

சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் ராக்போா்ட், மங்களூரு விரைவு ரயில்கள் நவ.1 முதல் நவ.3-ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் ராக்போா்ட், மங்களூரு விரைவு ரயில்கள் நவ.1 முதல் நவ.3-ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பராமரிப்புப் பணி காரணமாக எழும்பூரிலிருந்து இரவு 11 மணிக்கு மேல் புறப்படும் ரயில்கள் நவ.1, 2, 3 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து இயக்கப்படுவதாக முன்பதிவு செய்த பயணிகளுக்கு ரயில்வே நிா்வாகம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

அதன்படி, எழும்பூரிலிருந்து மங்களூருக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மங்களூரு விரைவு ரயில் (எண்: 16159), திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு புறப்படும் ராக்போா்ட் அதிவிரைவு ரயில் (எண்: 12653) ஆகியவை மேற்கண்ட நாள்களில் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், முன்பதிவு செய்த பயணிகளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டம் நீக்கதால் 2-வது முறையாக காந்தியை கொன்றிருக்கிறாா்கள்: டி.கே. சிவக்குமார்

காணும் பொங்கல்: சென்னை காவல்துறையின் முக்கிய அறிவிப்புகள்!

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து!

பிரபாஸின் தி ராஜா சாப்! ரூ. 200 கோடி வசூலைக் கடந்தது!

ஒரே நாளில் ரூ. 15,000 உயர்ந்த வெள்ளி! கிலோ ரூ. 3 லட்சத்தைக் கடந்து வரலாறு காணாத உச்சம்!!

SCROLL FOR NEXT