முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் தா .கிறிஸ்துராஜ். 
தமிழ்நாடு

அவிநாசியில் ரத்த தானம், இலவச பொது மருத்துவ முகாம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் 37 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு, அவிநாசியில், ரத்த தானம்,பொது மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கப்பட்டது.

DIN

அவிநாசி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் 37 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு, அவிநாசியில், ரத்த தானம்,பொது மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கப்பட்டது.

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம், திருப்பூர் குமரன் மருத்துவமனை ஆகியவை சார்பில் ரத்ததான முகாம் இலவச பொது மருத்துவ முகாம் அவிநாசி சேவூர் சாலை தனியார் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இந்த முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் தா. கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட தலைவர் டி. சாந்தி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் எஸ். ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர் பி .ரமேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். காலை முதல் மாலை வரை நடைபெற உள்ள இந்த முகாமில் ரத்த தானம், இலவச கண் சிகிச்சை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இசிஜி, எக்கோ ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT