ரயில் 
தமிழ்நாடு

பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

DIN

2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

அடுத்தாண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ஆம் தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 ஆம் தேதி உழவர் திருநாள், காணும் பொங்கலையொட்டி தொடர் அரசு விடுமுறை உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு வெளியூரில் வேலை செய்வோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதுண்டு. இதற்காக சிறப்புப் போக்குவரத்து வசதிகளும் செய்யப்படும். இதில், ரயில் பயணத்திற்கு 120 நாள்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு தொடங்கும்.

இந்நிலையில், ஜனவரி 11 ஆம் தேதி(வியாழக்கிழமை) ரயிலில் பயணிக்க இன்று முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஜனவரி 12-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) பயணிக்க நாளையும், ஜனவரி 13-ஆம் தேதி(சனிக்கிழமை) பயணிக்க செப். 15 ஆம் தேதியும், பொங்கலுக்கு முந்தைய நாள், அதாவது ஜனவரி 14-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ரயிலில் பயணிக்க செப். 16-ஆம் தேதி முன்பதிவு தொடங்குகிறது. 

ரயில் டிக்கெட் முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. மேலும், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு டிக்கெட் கவுன்டர்களிலும் முன்பதிவு செய்யலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

நாய்களுக்கு உணவளிப்பதில் ஆர்வலர்கள், பொதுமக்கள் மோதல்! அம்பத்தூரில் பரபரப்பு!

பிகாா் தோ்தல் வெற்றி போலி மதச்சாா்பின்மைக்கு பாடம்: இந்திய குடியரசு கட்சி

எம்சிடி வாா்டுகள் இடைத்தோ்தல் பிரசாரத்தில் தில்லி பாஜக மும்முரம்!

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா் விடுதலை தில்லி நீதிமன்றம் தீா்ப்பு

SCROLL FOR NEXT