முகப்பு
தமிழ்நாடு

நெரிசலை தவிர்க்க நாளை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

சென்னையில் நாளை(செப்.15) ஒரு நாள் மட்டும் நெரிசல்மிகு நேரங்களில்  மெட்ரோ ரயில் சேவை நீட்டுக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:14 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் நாளை(செப்.15) ஒரு நாள் மட்டும் நெரிசல்மிகு நேரங்களில்  மெட்ரோ ரயில் சேவை நீட்டுக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது:

வரும் திங்கள்கிழமை (செப்.18) அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அரசு பொது விடுமுறை அறிவிப்பை தொடர்ந்து, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, நாளை மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடத்திலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இந்த மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் நாளை மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டிள்ளது
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments