இண்டிகோ 
தமிழ்நாடு

நடுவானில் அவசரகால கதவை திறக்க முயன்ற தமிழக ராணுவ வீரர்!

தில்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் அவசரகால கதவை நடுவானில் திறக்க முயற்சித்த ராணுவ வீரரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

DIN

தில்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் அவசரகால கதவை நடுவானில் திறக்க முயற்சித்த ராணுவ வீரரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தில்லி விமான நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்னை விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் செங்கத்தை சேர்ந்த ராணுவ வீரர் மணிகண்டன் என்பவர் பயணித்துள்ளார்.

இந்த நிலையில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று அவசரகால கதவை மணிகண்டன் திறக்க முயற்சித்துள்ளார்.

இதனை கண்ட பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக இண்டிகோ ஊழியர்கள் மணிகண்டனை தடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானி அளித்த புகாரை தொடர்ந்து, மணிகண்டனிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT