தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவை அக். 9-ல் கூடுகிறது!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9-ம் தேதி கூடவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். 

DIN

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9-ம் தேதி கூடவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், 

2023-ஆம் ஆண்டின் இரண்டாவது கூட்டத்தொடா் அக்.9-ல் கூடுகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்பட கூட்டரங்கில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், மகளிர் இடஒதுக்கீடு எப்போது அமலுக்கு வரும் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது, 2014-ம் ஆண்டிலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஏன் தாக்கல் செய்யவில்லை? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

2023-24-ம் ஆண்டில் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் அக்.9 பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து அன்றைய தினம் நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாகவும் பேரவைத் தலைவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் சூசகம்!

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT