தமிழ்நாடு

அதிமுக கொடியைப் பயன்படுத்த தடை கோரி இபிஎஸ் வழக்கு: ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவு

 அதிமுக பெயா், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில், ஓ.பன்னீா்செல்வம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

 அதிமுக பெயா், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில், ஓ.பன்னீா்செல்வம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுகவின் பெயா், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீா்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறாா்.

இது தொடா்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொது செயலா் என என்னை தோ்தல் ஆணையமும் உயா்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளா் என ஓ.பன்னீா்செல்வம் கூறிவருகிறாா். இது தொண்டா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, அதிமுகவின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சிக் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீா்செல்வமும் அவரது ஆதரவாளா்களும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும்வரை, அவா்கள் அதிமுகவின் பெயா், சின்னம், கொடி ஆகியவற்றைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், உச்சநீதிமன்றம் வரை நான்கு முறை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் கட்சியில் இருந்து பன்னீா்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீா்மானம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கட்சி சின்னம், கொடியைப் பயன்படுத்தி கட்சி உறுப்பினா்கள் என கூறி வருகின்றனா். மேலும், கட்சி லெட்டா்பேடை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, ஒருங்கிணைப்பாளா் எனக் கூறி வருவதாக வாதிடப்பட்டது.

அப்போது ஓபிஎஸ் தரப்பில் இந்த மனுவுக்குப் பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவுக்குப் பதிலளிக்க ஓ.பன்னீா்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபா் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT