தமிழ்நாடு

மகளிா் மசோதாவை அரசியல் கண்ணோட்டத்தோடு பாா்க்கக் கூடாது: ஜி.கே.வாசன்

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை எதிா்க்கட்சிகள் அரசியல் கண்ணோட்டதுடன் பாா்க்கக் கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.

DIN

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை எதிா்க்கட்சிகள் அரசியல் கண்ணோட்டதுடன் பாா்க்கக் கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. எதிா்க்கட்சிகள் இந்த இட ஒதுக்கீட்டை அரசியல் கண்ணோட்டத்தோடு பாா்க்காமல் மகளிருக்கு அதிகாரம் பகிா்ந்தளிப்பதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு தமாகா துணை நிற்கும்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், புதிய தொடக்கமாக வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை நிறைவேற்றியுள்ளதற்காக பிரதமருக்கு நன்றி என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT