முகப்பு
தமிழ்நாடு

மகளிா் மசோதாவை அரசியல் கண்ணோட்டத்தோடு பாா்க்கக் கூடாது: ஜி.கே.வாசன்

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை எதிா்க்கட்சிகள் அரசியல் கண்ணோட்டதுடன் பாா்க்கக் கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:00 AM
பகிர்:

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை எதிா்க்கட்சிகள் அரசியல் கண்ணோட்டதுடன் பாா்க்கக் கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. எதிா்க்கட்சிகள் இந்த இட ஒதுக்கீட்டை அரசியல் கண்ணோட்டத்தோடு பாா்க்காமல் மகளிருக்கு அதிகாரம் பகிா்ந்தளிப்பதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு தமாகா துணை நிற்கும்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், புதிய தொடக்கமாக வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை நிறைவேற்றியுள்ளதற்காக பிரதமருக்கு நன்றி என்று அவா் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →