முகப்பு
தமிழ்நாடு

ஏரிகள் உடைந்ததால் வேளச்சேரி, பள்ளிக்கரணையில் வெள்ளம்: அமைச்சர்

எந்த ஆண்டு பருவமழையோடும் ஒப்பிட முடியாத வகையில் வரலாறு காணாத மழை இந்த ஆண்டு பெய்துள்ளது என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Updated On : 10 டிசம்பர், 2023 at 11:06 AM
பகிர்:

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒருவர் கூட விடுபட்டுப்போகாத வகையில் வெள்ள நிவாரணம் வழங்கப்படும். 

ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால்தான் பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் பாதிப்பு அதிகமானது. செங்கல்பட்டில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டதாலும் வெள்ள பாதிப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

எந்த ஆண்டு பருவமழையோடும் ஒப்பிட முடியாத வகையில் வரலாறு காணாத மழை இந்த ஆண்டு பெய்துள்ளது. சென்னை மாநகராட்சி மூலம் தேங்கிய மழைநீர் மோட்டார்கள் கொண்டு அகற்றப்பட்டு வருகின்றன. 

பல்வேறு பகுதிகளில் மருத்துவ முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம்  7 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.  டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. சித்தா, யுனானி, அலோபதி என அனைத்து வகையான  மருந்துகளும் கையிருப்பில் உள்ளது.

வெள்ள பாதிப்புகள் குறித்து பேச எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமாருக்கு தார்மீக உரிமை கிடையாது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.