முகப்பு
தமிழ்நாடு

மத்திய அரசின் நிவாரண நிதி தேவை: மு.க.ஸ்டாலின்

வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் நிவாரண நிதி தேவை என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Updated On : 26 டிசம்பர், 2023 at 5:15 PM
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 7:02 PM


வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் நிவாரண நிதி தேவை என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் தமிழ்நாடு பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளதால், உடனே மத்திய அரசு நிதி வழங்கி உதவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

புயல்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மீட்புத் துறையில் உள்ள நிதி போதாது என்றும் 

சீரமைப்பு பணிகளுக்கான நிவாரண நிதி தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமனிடம், நிவாரண நிதியின் அவசியத்தை வலியுறுத்தி 72 பக்கங்கள் கொண்ட மனுவை தங்கம் தென்னரசு அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.