முகப்பு
தமிழ்நாடு

42 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.312 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று 42 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:40 PM
42 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.312 உயர்வு!
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று 42 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.

டிச.31ஆம் தேதி ஒரு சவரன் ரூ.41,040 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், ஜன.9ஆம் தேதியான இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,260 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,080 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.50 காசுகள் உயர்ந்து ரூ.74.90 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.74,900 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்துவரும் நிலையில் நகைப்பிரியர்களுக்கும், பெண்களை பெற்றவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.