முகப்பு
தமிழ்நாடு

தென்காசி: 5 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தென்காசியில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

Updated On : 7 ஜூலை 2023, 8:27 am IST
கோப்புப் படம்
பகிர்:

தென்காசியில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

தொடர் மழை காரணமாக செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், கடையம், கீழப்பாவூர்  ஆகிய பகுதிகளில் உள்ல பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், நீலகிரி, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக (ஜூலை 8-10 ) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.