தமிழ்நாடு

இன்று முதல் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

DIN

தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணிநேரத்தில் நீடாமங்கலம் 2, நாகுடி, கமுதி தலா ஒரு சென்.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் அதிகபட்ச வெப்பம் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தென் இந்தியப் பெகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை(செவ்வாய்கிழமை): தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காரணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

கரூாில் கனமழை!

பிரதோஷ நாளில்...

வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக பல கோடிகளை பெற்றுள்ளது ஆம் ஆத்மி: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

பாபநாசம் பகுதியில் பலத்த மழை

SCROLL FOR NEXT