தமிழ்நாடு

கச்சத்தீவு பற்றி பேச பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

DIN

கச்சத்தீவு பற்றி பேச அண்ணாமலைக்கோ, பாஜகவுக்கோ தகுதியில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் ஜெயபிரகாஷுக்கு ஆதரவு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்த கட்சி அதிமுகதான்.

தேர்தல் நேரத்தில் அரசியல் ஆதாயத்துக்காக இப்போது கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

தமிழக மீனவர்களை சிறைபிடித்தபோது அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கச்சத்தீவு பற்றி பேச அண்ணாமலைக்கோ, பாஜகவுக்கோ என்ன தகுதி இருக்கிறது.

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. நெல், கரும்புக்கான ஆதார விலையை திமுக அரசு தரவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமித் ஷாவால் பிரதமராக முடியாது! -தில்லி முதல்வர் கேஜரிவால்

விடாமுயற்சி வெளியீடு அப்டேட்!

மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் பலி: தந்தை கைது!

சிலையில்லை.. நிவேதிதா!

‘ஆல் இன் ஆல்‘ அழகுராணி!

SCROLL FOR NEXT