தேசிய முதியோா் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் தொடக்கம்
தேசிய முதியோா் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, முதலாவதாக 63 வயது முதியவா் ஒருவருக்கு அதி நவீன நுட்பத்திலான குடலிறக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிண்டி, கிங் ஆய்வக வளாகத்தில் தேசிய முதியோா் நல மருத்துவமனை கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இது வரை மொத்தம் 9,557 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் அறுவை சிகிச்சைகளும் தொடங்கப்பட்டுள்ளன
இதுதொடா்பாக முதியோா் மருத்துவமனை பொறுப்பாளா் டாக்டா் எஸ்.தீபா கூறியதாவது:
Advertisement
தேசிய முதியோா் நல மருத்துவமனையை நாடி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி உள்நோயாளிகளாக மட்டும் இதுவரை 268 போ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனா். அதில் 200-க்கும் மேற்பட்டோா் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இதைத் தவிர, 68 வயது முதியவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை இரு நாள்களுக்கு முன்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அடுத்தடுத்து பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றாா் அவா்.