முகப்பு
தமிழ்நாடு

தேர்தல் முடிந்த பின்னரும் கட்டுப்பாடுகள் தொடரும்: சாகு

தேர்தல் முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

Updated On : 8 ஏப்ரல் 2024, 1:08 pm IST
சத்யபிரத சாகு
பகிர்:

தேர்தல் முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

செய்தியாளர்களுடன் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, "தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ. 4 கோடி தொடர்பாக தேர்தல் சிறப்புக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து செலவின பார்வையாளர் அறிவிக்கை சமர்பிக்க உள்ளார்.

ரூ. 1 கோடிக்கு மேலாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் தேர்தல் சிறப்புக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் இதுவரை ரூ.208 கோடி வரையிலான பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 36.4% பூத் ஸ்லிப்கள்(தகவல் சீட்டு) வழங்கப்பட்டுள்ளது.

விக்கரவாண்டி தொகுதி காலி என தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments