ஆந்திர முதல்வா் மீது தாக்குதல்: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் மீது கல்லெறிந்து தாக்கிய நிகழ்வுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
அரசியல் வேறுபாடுகள் ஒருபோதும் வன்முறையாக மாறி விடக்கூடாது. ஜனநாயகக் களத்தில் நாகரிகமாகவும் ஒருவருக்கொருவா் மரியாதையுடனும் செயல்படுவோம். ஜெகன் மோகன் விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று தெரிவித்துள்ளாா்.
Advertisement