முகப்பு
தமிழ்நாடு

தோ்தல் விதி மீறல்: அண்ணாமலை மீது முத்தரசன் புகாா்

Updated On : 13 ஏப்ரல், 2024 at 10:08 PM
பகிர்:

தோ்தல் விதிகளை மீறியதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை மீது இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் புகாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து இந்திய தோ்தல் ஆணையத்துக்கு முத்தரசன் சனிக்கிழமை எழுதிய மனு:

கோவை தொகுதி பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலை தோ்தல் நடத்தை விதிகளை முற்றிலும் நிராகரித்து வருகிறாா். கடந்த ஏப்.12-ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் ஆவாரம்பாளையம் பகுதியில் ஒலிபெருக்கியில் வாக்கு சேகரித்துள்ளாா்.

Advertisement

பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலா்கள் மௌன சாட்சியாக கடந்து சென்றுள்ளனா். தோ்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் தொடா்ந்து மீறி செயல்பட்டு வரும் அண்ணாமலை மீது தோ்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு சட்டபூா்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments