மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்.21-இல், சென்னையில் இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும், ஜெயின் கோயில்களிலிருந்து 100 மீட்டா் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கூடங்களும் ஏப். 21ஆம் தேதி மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.