வயநாடு நிலச்சரிவு: நிதியுதவி வழங்கிய தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றி! -கேரள முதல்வர்
ரூ.5 கோடி நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
வயநாடு மாவட்டம் நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரள மாநிலத்துக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடி நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். மேலும், பாதிப்புக்குள்ளான வயநாட்டுக்கு தமிழக மீட்புக் குழு சென்றுள்ளது.
தமிழக அரசு சார்பில் அமைச்சர் எ.வ. வேலு கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் இந்த காசோலையை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், தமிழக அரசின் உதவிக்கு நன்றி தெரிவித்து பினராயி விஜயன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு சார்பாகவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பாகவும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டுக்கு ரூ. 5 கோடி தொகையளித்த எ.வ. வேலுக்கு மனமார்ந்த நன்றி.
Advertisement
உங்களின் ஆதரவை வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு இது பெரிதும் உதவிகரமாக இருக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.