ஊத்தங்கரை பேருந்து நிறுத்தம்.. படம்: எக்ஸ்
தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை!! ஊத்தங்கரையில் 503 மி.மீ. பதிவு!

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பதிவான மழை பற்றி...

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் திங்கள்கிழமை காலை 8 மணிவரை ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு 10.30 மணி முதல் 11.30 மணியளவில் மரக்காணம், புதுச்சேரி இடையே கரை கடந்தது.

இந்த புயல் கரையைக் கடக்கும் போது, மெதுவாக கடந்ததால் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே இரவில் 500 மி.மி. மழை கொட்டித் தீர்த்தது.

தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், உள்மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யத் தொடங்கியது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 503 மி.மீ., தர்மபுரி மாவட்டம் அரூரில் 331 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.

ஊத்தங்கரை பாம்பாறு அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீா் முழுவதும் ஆற்றில் வெளியேற்றப்படுவதால், கரையோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கில் சென்ற பெண்ணின் தங்கச் செயினை பறித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது!

பேரவை வளாகத்தில் பாமக எம்எல்ஏக்கள் தர்னா!

கரூரில் பலியானோருக்கு பேரவையில் அஞ்சலி!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது!

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்! ரூ. 95 ஆயிரத்தை நெருங்கியது! வெள்ளி விலை ரூ. 206

SCROLL FOR NEXT