ஃபென்ஜால் புயல் பாதிப்பு: நடிகர் கார்த்தி நிவாரணம் வழங்கல்!
ஃபென்ஜால் புயலால் வட மாவட்டங்களில் வெள்ள நீா் தேங்கி பெரும் பாதிப்பு
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவியாக, ‘முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு’ நடிகர் கார்த்தி நிவாரணம் வழங்கினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் ரூ. 15 லட்சம் தொகையை அவர் வழங்கியுள்ளார்.
ஃபென்ஜால் புயலால் வட மாவட்டங்களில் வெள்ள நீா் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, புயல் வெள்ள நிவாரணத்துக்காக தனது ஒரு மாத ஊதியத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
அதேபோல, விசிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஃபென்ஜால் புயல் நிவாரணப் பணிகளுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.