முகப்பு
தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது

இரண்டு நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 9 டிசம்பர், 2024 at 7:36 AM
பேரவைக் கூட்டத்தொடர்.
பகிர்:

இரண்டு நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது.

கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

அதன்படி கோதண்டம், சுப்புராயர், முகமது கனி, தொழிலதிபர் ரத்தன் டாடா, சீதாராம் யெச்சூரி, முரசொலி செல்வம் உள்ளிட்டோரின் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

டங்ஸ்டன் சுரங்கத்தை கைவிட பரிசீலனை: அண்ணாமலை தகவல்

இரண்டு நாள்கள் நடைபெறும் கூட்டத்தில், டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக் கோரும் அரசினா் தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

சட்டப்பேரவையின் ஒரு கூட்டத் தொடருக்கும் அடுத்த கூட்டத் தொடருக்குமான கால இடைவெளி ஆறு மாதங்களுக்குள் இருக்க வேண்டும்.

அந்த வகையில், துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று ஜூன் 29-இல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

ஆறு மாதங்களுக்குள் மீண்டும் பேரவை கூட்டப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →