நாகை மாவட்டத்துக்கு நாளை(டிச.12) உள்ளூர் விடுமுறை!
நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச.12) விடுமுறை!
நாகூர் சந்தனக்கூடு ஊர்வலத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்துக்கு நாளை(டிச.12) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நிகழாண்டு கந்தூரி விழா கடந்த டிச. 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி வியாழக்கிழமை (டிச. 12) அதிகாலை நடைபெற உள்ளது.
வெள்ளிக்கிழமை (டிச.13) மாலை கடற்கரைக்கு பீா் ஏகுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. டிச.15-ஆம் தேதி இரவு புனித கொடியிறக்கத்துடன் கந்தூரி விழா நிறைவு பெறுகிறது.