இந்திய வானிலை மையத்தின் செயற்கைக்கோள் படம். imd
தமிழ்நாடு

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்தது!

வங்கக் கடலிலேயே புயல் சின்னம் வலுவிழந்தது..

DIN

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்ததாக இந்திய வானிலை மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆந்திரம் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே இடத்தில் நகராமல் இருப்பதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகின்றது.

இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் டிச.26 முதல் டிச.31 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆபரேஷன் சிந்தூரில் முகாம் அழிப்பு உண்மைதான்! - ஜெய்ஷ்-யைத் தொடர்ந்து ஒப்புக்கொண்ட லஷ்கர்!

சிவ (நவ) தாண்டவம்

விஜய் நாளை மீண்டும் பிரசாரம்- தொண்டர்களுக்கு தவெக முக்கிய அறிவுறுத்தல்

வேலைவாய்ப்பு அருளும் வேணுகோபாலன்

குறை தீர்க்கும் குமரன்

SCROLL FOR NEXT