காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படாததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 97 கன அடியாக சரிந்துள்ளது.
இந்த நிலையில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும் குடிநீர் தேவைக்கும் வினாடிக்கு 6,600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைய தொடங்கியது.
நேற்று காலை 70.42 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 70.05 அடியாக குறைந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 0.37 அடி குறைந்துள்ளது.
தற்போது அணையின் நீர் இருப்பு 32.74 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிந்த கடும் வறட்சியான சூழலில், அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தென்மேற்கு பருவமழை காலம் வரை மேட்டூர் அணை காவிரியில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதையும் படிக்க: சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாநிலங்களவையில் கோரிக்கை
இந்த நிலை நீடித்தால் அடுத்த நீர்ப்பாசன ஆண்டில் குறித்த நாளில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது கேள்விக்குறியாகும்.