முகப்பு
தமிழ்நாடு

மத்திய அரசுக்கு எதிராக கேரளத்தின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு: மு.க. ஸ்டாலின்

மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ள கேரள அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

மத்திய அரசுக்கு எதிராக கேரளத்தின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு: மு.க. ஸ்டாலின்

மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ள கேரள அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:42 PM
பகிர்:

மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ள கேரள அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கேரளத்தின் கடன் வாங்கும் வரம்பு மற்றும் வருவாய் பற்றாக்குறை மானியத்தை குறைத்த மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசு, கேரள மாநில ஆளுநரைக் கண்டித்தும், மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் பிப்.8-ஆம் தேதி தில்லியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள மாநில இடது ஜனநாயக அரசு சாா்பில் முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் தா்னா போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனின் போராட்டத்துக்கு ஆதரவு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடித்தத்தில் தெரிவித்திருப்பதாவது:

“மத்திய அரசு சில காலமாகவே மாநில அரசுகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் நிலைமை வேகமாக மோசமடைந்துள்ளது என்றும், மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் இத்தகைய மறைமுகக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் முற்போக்கான மாநிலங்களிடையே தெளிவான, ஒருமித்த கருத்து உருவாகியுள்ளது.

மாநிலங்களின் பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது. இருப்பினும், மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்த, இந்திய அரசமைப்பின் 293-வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இந்தப் பிரிவின்படி, மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற ஷரத்து, மாநில அரசின் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு-செலவு மேலாண்மை விதிகளின்படி வரையறுக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறையை நேர் செய்யும் மாநில அரசின் முனைப்புகளை தடுக்கும் கருவியாக மத்திய அரசால் மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் கருதிய நிதிக் கூட்டாட்சியின் அடிப்படைக்கே மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை தான் முழுமையாக ஆதரிக்கிறேன். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை கேரள அரசுக்கு வழங்கத் தயாராக உள்ளது. இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்ள கேரள அரசின் நடவடிக்கைகளோடு, தமிழ்நாடு அரசின் முயற்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும்.” என்று தனது கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →