முகப்பு
தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா: பந்தல் கால் நிகழ்ச்சி

தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழாவுக்காகப் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:43 PM
தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை பெருவிழாவுக்காக வியாழக்கிழமை நடப்பட்ட பந்தல்கால்.
பகிர்:

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழாவுக்காகப் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரியகோயிலில் ஆண்டு தோறும் சித்திரைப் பெருவிழா 15 நாள்களுக்கு நடைபெறுவது வழக்கம். 

நிகழாண்டு சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில், சித்திரைத் தேரோட்டம் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழா ஏப்ரல் 23 ஆம் தேதி கொடி இறக்கத்துடன் நிறைவடைகிறது.

இதையொட்டி, பெரிய கோயில் வளாகத்தில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பந்தல் கால் நடப்பட்டது.

இதில், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கோ. கவிதா, கோயில் செயல் அலுவலர் ப. மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →