முகப்பு
தமிழ்நாடு

பிப். 27, 28 - தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

தூத்துக்குடி மீனவர்கள் பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம்

Updated On : 26 பிப்ரவரி, 2024 at 1:11 PM
கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மீனவர்கள் பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி கடலோர பாதுகாப்புப் படை தீவிர நோந்துப் பணியில் ஈடுபடவுள்ளதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகைத் தரவுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்று பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.