தமிழ்நாடு

தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக வெல்லும்: அண்ணாமலை

DIN

தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக வெல்லும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திவந்த 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு விழா பல்லடம் மாதப்பூரில் இன்று (பிப். 27) நடைபெற்று வருகிறது.

விழா மேடையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார். அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மேடையில் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு இருப்பதற்கு ஒரே காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான். இது யாத்திரையின் நிறைவு விழாவாக இருந்தாலும், செய்ய வேண்டிய செயல்கள் இன்னும் ஏராளம் உள்ளது.

அனைவரின் உழைப்பையும் ஒன்றிணைத்து தமிழகத்திலிருந்து 39 மக்களவை உறுப்பினர்களை அனுப்பிவைக்கும்வரை நமக்கு ஓய்வு இல்லை.

10 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி பார்க்கும்போது தமிழகத்திற்கான மாற்றம் பல்லடத்திலிருந்து தொடங்கியது என்று இருக்க வேண்டும்.

400 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நீடிப்பார்.

தமிழகம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடியின் பெருமை பரவியுள்ளது. இந்தியா முழுவதும் பாஜக புகழ் பரவியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக வென்று ஆட்சியைப் பிடிக்க உதவும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீடாகும் படையப்பா!

இன்று ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 49 தொகுதிகள் யார் பக்கம்?

தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: ஏக்நாத் ஷிண்டே

தமிழகத்தில் 2 நாள்களுக்கு மிக கனமழை தொடரும்!

வங்கக்கடலில் மே 22-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

SCROLL FOR NEXT