மதுரையில் பிரதமர் மோடி!
பல்லடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
திருப்பூர், பல்லடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திவந்த 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு விழா பல்லடம் மாதப்பூரில் இன்று (பிப். 27) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். பின்னர், பல்லடம் பொதுக்கூட்ட நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் மோடி மதுரை சென்றடைந்தார்.