கிருஷ்ணகிரி அருகே டேங்கர் லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தால் கிருஷ்ணகிரி - ஓசூர் இடையியான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலையின் இரு புறங்களும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.