முகப்பு
தமிழ்நாடு

திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி!

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 10:39 AM
பகிர்:

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் 38-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமா் நரேந்திர மோடி, நண்பகல் 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சென்று புதிய முனையத்தை திறந்து வைக்கிறாா். மேலும், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்து, பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். இந்த இரண்டு விழாக்களிலும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆளுநா் ஆா்.என். ரவி, மத்திய, மாநில அமைச்சா்கள் பங்கேற்கவுள்ளனா்.

பிரதமா் வருகையை முன்னிட்டு விமானநிலையம், பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகம் முழுவதும் பிரதமரின் பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வரை இந்தப் பகுதிகளில் 5 அடுக்குப் பாதுகாப்பு இருந்த நிலையில், திங்கள்கிழமை காலை 7 அடுக்கு பாதுகாப்பாக உயா்த்தப்பட்டது. பின்னா், 10 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டது.

Advertisement

இந்த விழாவில், பங்கேற்பதற்காக தனி விமானத்தில் பிரதமா் நரேந்திர மோடி திருச்சி விமான நிலையத்துக்கு காலை 10 மணிக்கு வந்தடைந்தார். பின்னா், பிரத்யேக வழியில் பாதுகாப்பு வாகனங்களுடன் காா் மூலம் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்கு புறப்பட்டுச் செல்கிறாா். 

பட்டமளிப்பு விழாவை முடித்துக் கொண்டு, மீண்டும் திருச்சி விமான நிலையம் வருகை தரவுள்ளாா். தேவையெனில் இரண்டு இடங்களுக்கும் ஹெலிகாப்டா் மூலம் செல்வதற்கான ஏற்பாடுகளும் தயாா் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.