சென்னை: தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்தும், 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வரின் பாதுகாப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக திருநாவுக்கரசு, சென்னை புலனாய் குருவித்துறை காவல் கண்காணிப்பாளராக ஆர்.ராமகிருஷ்ணன், தெற்கு போக்குவரத்துக் காவல் துணை ஆணையராக வண்டி கங்காதர், தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் காவல் கண்காணிப்பாளராக மேகலீனா ஜடன் உள்ளிட்டோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | உலக முதலீட்டாளர்கள் மாநாடு: ஒரே நாளில் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு!
சென்னை மேற்கு பகுதி இணை ஆணையராக விஜயகுமார், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கே.சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.